Friday, February 11, 2011

கனவுகள் மறுபடியும் ..........

வாசனை வீசிய கார்காலம்- மீண்டும்  
வாசல் வந்துதான் தட்டதா 
வடிந்து கிடக்கும் கானல் நீர் 
கடந்து எனைத்தான் செல்லாதா
மண்டிக் கிடக்கும் உன் சோலைகளில் 
மலிந்த மரம் ஒன்று உன் வாசல் விட்டு 
வெளியே வந்தும் உனைத் தேடுகிறேன் 
மீண்டும் உன் மடி சாய நாடுகிறேன் 

மழலையாய்
மகனாய்
மாணவனாய்
மாணவ தலைவனாய் 
எனைத் தந்தவள் நீயல்லவா....

வடித்து வைத்த கவிதைகளும் 
கிறுக்கி வைத்த கதைகளும் 
கல்லூரி மேசை தனிலே...
கடந்து போன காலங்களில் 
கரைந்து சில போயிருந்தாலும் 
அதன் நினைவுதனை சுமப்பவள் நீயல்லவா ....

கட்டவிழ்ந்த காளைகளை 
உந்தன் மண் தனிலே 
சுற்றித் திரிந்த போது சிறகடித்து 
பட்ட எம் காலின் காயத்தையும் 
மெத்தத் திரிந்த இந்த சுமைதனையும் 
பொறுத்தவள் அன்று நீயல்லவா....

எத்தனை முறை விழுந்த போதும் தட்டி எழுப்பி
சென்று வாடா என் மகனே என்றுரைத்து
நாம் வெற்றியின் சிகரங்கள் தொட்ட போது
எமை பார்த்து ரசித்தவள் நீயல்லவா ..... 

அன்று கண்ட நினைவுகள் நெஞ்சிடையே
அலையலையாய் வந்து மெல்ல மறைகிறதே 
சுற்றித் திரிந்த என் பாதங்கள் மீண்டும் வந்து 
உன் மடி மீது படிந்து விட துடிக்கிறதே 
அன்ரருமை நானுணரத் தவறிற்றனோ 
அந்த வாழ்வுதனை மீண்டும் நாடுகிறேன் 

பித்தனென மாறிவிட மாட்டேனோ -மீண்டும் 
நித்தமுந்தன் மடி நான் சாய மாட்டேனோ 
முத்தமிட்டு சொல்லுகிறேன் உன்னடி மண்ணை 
சத்தியமாய் உன்னை விட வேறொன்றில்லை .............

இப்படிக்கு  
ப்ரியமுடன் Prakhash

No comments:

Post a Comment